காரைக்குடி, மே 12: காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக 40ம் ஆண்டு தோற்றுவிப்பு நாள் விழா மற்றும் அலுவலர்கள் நாள் விழா கொண்டாப்பட்டது. பதிவாளர் பேராசிரியர் செந்தில்ராஜன் வரவேற்றார். மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் சங்குமணி விழாவை துவக்கி வைத்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி தலைமை வகித்து பேசினார். விழாவில் தேர்வாணையர் பேராசிரியர் ஜோதிபாசு, அறிவியல் புல தலைவர் பேராசிரியர் ஜெ,ஜெயகாந்தன், சின்டிகேட் உறுப்பினர் ராஜாராம், ஆங்கில துறை உதவி பேராசிரியர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக நிதி அலுவலர் பேராசிரியர் வேதிராஜன் நன்றி கூறினார்.
காரைக்குடி பல்கலை.யில் அலுவலர் தின விழா
previous post