Sunday, June 16, 2024
Home » கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

by Neethimaan

கரூர், மே. 11: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார் பகுதியில் வாகன நடமாட்டத்தை கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய வர்த்தக மையமாக ஜவஹர் பஜார் உள்ளது. அனைத்து வகையான வர்த்தக நிறுவனங்களும் இந்த பஜாரில் உள்ளதால், மாவட்டத்தில் பலவேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளானோர் வந்து செல்கின்றனர். மேலும், இந்த பஜார் பகுதிக்கு தினமும் அதிகளவு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனப் போக்குவரத்தும் அதிகளவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிகளவு வாகன போக்குவரத்து காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஜவஹர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத சூழல் நிலலி வருகிறது.

இந்த பஜார் பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பஜாரை எளிதாக கடந்து செல்ல முடியாமல் அனைதது தரப்பினர்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த ஜவஹர் பஜார் பகுதியை பார்வையிட்டு, எளிதான வாகன போக்குவரத்து நடைபெறும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

eighteen + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi