கரூர், மார்ச்16:கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக் கழகம் நிர்வாக இயக்குனர் மற்றும் கரூர் மண்டல பொது மேலாளரின் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்து திருமாநிலையூர் மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கண்டன கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை டிரைவர் கண்டக்டர்களுக்கு விடுமுறை கொடுக்காமல் பணிச்சுமை அதிகப்படுத்துகின்றனர். தொழிலாளர்கள் உடல் நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இதனை போக்குவரத்து கழக அதிகாரிகள், பணி பொறுப்பாளர்கள் சரி செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் விளக்கி பேசினர்.