Wednesday, May 15, 2024
Home » ஒரத்தநாடு அருகே மாயமான வாலிபர் ஆற்றில் சடலமாக மீட்பு

ஒரத்தநாடு அருகே மாயமான வாலிபர் ஆற்றில் சடலமாக மீட்பு

by Neethimaan

ஒரத்தநாடு, ஆக.23: ஒரத்தநாடு அருகே அறுமலை வாய்க்காலில் மிதந்து வந்த வாலிபர் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணத்தங்குடி கீழையூர் அறுமலை வாய்க்காலில் நேற்று மதியம் 36 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகை நிலையில் ஆற்றில் மிதந்து வருவதாக கண்ணந்தன்குடி விஏஓவுக்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகார் பேரில் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் மிதந்து வந்த பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுமதித்தனர்.

பின்னர் இது தொடர்பாக ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையில் வல்லம் காவல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் கார்த்தி என்பவர் மாயமானதாக அவரது மனைவி ராதா என்பவர் புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக ஒரத்தநாடு போலீசார் வல்லம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் ஒரத்தநாட்டிற்கு வருகை தந்த கார்த்தி மனைவி ராதா மட்டும் அவரது உறவினர்கள் பிரேதத்தை பார்த்து தனது கணவர்தான் என உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து கார்த்தி உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

You may also like

Leave a Comment

14 − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi