திருவாரூர், ஜூலை 23: மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்தி வரும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அம்மாநில அரசை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான கொடுமையையும், கலவரத்தையும் கண்டும் காணாமல் இருந்து வரும் ஒன்றிய அரசை கண்டித்தும் திருவாரூரில் நேற்று பழைய பேருந்து நிலையம் முன் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் பத்மாவதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தமயந்தி, மாவட்ட தலைவர் சுலக்சனா மற்றும் பொறுப்பாளர்கள் உஷா, பூபதி, வனிதா, கௌரி, மீனாம்பாள், லலிதா, மேரி, பூமா, அன்ன பாக்கியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.