Friday, May 10, 2024
Home » ஆரல்வாய்மொழி அருகே பைக் மீது மினிலாரி மோதியதில் குழந்தை உள்பட 3 பேர் காயம்

ஆரல்வாய்மொழி அருகே பைக் மீது மினிலாரி மோதியதில் குழந்தை உள்பட 3 பேர் காயம்

by Neethimaan

ஆரல்வாய்மொழி, ஏப்.28: ஆரல்வாய்மொழி அருகே மினி லாரி மோதியதில் ைபக்கில் சென்ற கணவன், மனைவி மற்றும் குழந்தை படுகாயம் அடைந்தனர். ஆரல்வாய்மொழி முத்து நகரை சேர்ந்தவர் அந்தோணி பிரான்சிஸ் (33). இவர் நேற்று மாலை தனது மனைவி அனிதா மற்றும் தனது குழந்தையுடன் தனது பைக்கில் நாகர்கோவில்-காவல்கிணறு நான்கு வழி சாலையில் கண்ணுபொத்தை அருகே சென்று கொண்டிருந்தார் அப்போது நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு சென்ற மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதி, கவிழ்ந்து பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது அதே சாலையில் சென்று கொண்டிருந்த அந்தோணிபிரான்சின் பைக்கில் மினி லாரி மோதியது.

இதனால் பைக்கில் சென்ற அந்தோணிபிரான்சிஸ், அனிதா மற்றும் குழந்தை ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் அனிதாவின் கழுத்துப் பகுதி மற்றும் கைப்பகுதிகளிலும் காயம் ஏற்பட்டது. குழந்தை அந்தோணிபிரான்சிஸ் ஆகியோரும் காயம் அடைந்தனர். விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த 3 பேரையும் மீட்டனர். தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், காயமடைந்த மூன்று பேரையும், அவ்வழியாக வந்த காரில் ஏற்றி நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மினி லாரியை ஒட்டி வந்த மதுரை பழங்கா நத்தம் விகேபி நகரை சேர்ந்த முருகானந்தம் மகன் சிரஞ்சீவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

7 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi