கோவை, ஏப். 6: கோவை குனியமுத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் சுலைமான் (57), கட்டிட ஒப்பந்ததாரர். இவர் குனியமுத்தூர் ஹசன் கார்டனில் புதிதாக கட்டுமான பணியை மேற்கொண்டு வருகிறார். கட்டிட பணிக்காக சென்ட்ரிங் சீட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஆட்டோவில் வந்த 2 பேர் அங்கிருந்த சென்ட்ரிங் சீட்டுகளை திருடி ஆட்டோவில் ஏற்றி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் பிடித்து கட்டிட ஒப்பந்ததாரர் சுலைமானுக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், இரும்பு சென்ட்ரிங் சீட்டுகளை திருடியது குனியமுத்தூர் குறிஞ்சி கார்டனை சேர்ந்த பெயிண்டர் முகமது ஆசிக் (24), உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சனூப் (25) என தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.