Monday, June 17, 2024
Home » அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நாளை வருகை முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம்

அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நாளை வருகை முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம்

by Neethimaan

பெரம்பலூர்,ஆக.27: பெரம்பலூர்மாவட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (28ஆம் தேதி) அரசுத் துறைகளின் திட்டப் பணிகள் தொடர் பாக ஆய்வு மேற்கொள்ள வருகை தர உள்ளதால் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (28ம் தேதி) பெரம்பலூர் மாவட்டத்திற்கு அரசுத்துறைகளின் திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வருகை தர உள்ளதால் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டஅரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்துத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமையேற்று, திட்டங்களின் பணி முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாளை (28ம் தேதி) மதியம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதுதொடர்பாக அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் தங்கள் துறையின் சார்பில் மேற் கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகளின் முழு விபரம் அடங்கிய தகவல்களை அறிக்கையாக அளித்திட வேண்டும். திட்டத்தின் நோக்கம், திட்டத்தின் செயல்பாடு, பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை, அரசின் இலக்கீடு, எய்தப்பட்ட இலக்கீடு என அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதாக அந்த அறிக்கை அமைந்திட வேண்டும்.

குறிப்பாக தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு நகரப்பேருந்குளில் இலவச பயணம் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த விரிவான அறிக்கையினை அளித்திட வேண்டும் எனத் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) மஞ்சுளா உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

7 − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi