Sunday, October 6, 2024
Home » பெரம்பலூரில் தேசிய வாக்காளர் தின விழா வாக்குரிமை முக்கியத்துவம் உணர வேண்டும் பிறப்பு சான்றிதழில் குழந்தை பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பெரம்பலூரில் தேசிய வாக்காளர் தின விழா வாக்குரிமை முக்கியத்துவம் உணர வேண்டும் பிறப்பு சான்றிதழில் குழந்தை பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

by Francis

 

பெரம்பலூர்,ஜன.26: பெரம்பலூர் மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தலுக்கான கால அவகாசம் டிச.-31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கற்பகம் தெரிவித்திருப்பதாவது :
பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக் கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு, இறப்பு பதிவுசட்டம், 1969 வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடி யுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்யலாம்.

12 மாதங்களுக்குப் பின் பதினைந்து வருடங்களுக்குள் ரூ.200 தாமத கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது. இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவு ரைபடி, 2000 ஜன- 1ம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 2000 ஜன-1க்குப் பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட் டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதார ங்களுடன் (கல்வி சான்று. ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம். இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனி வரும் காலங்களில் வழங்க இயலாது என்று இந்திய தலைமை பிறப்பு-இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்று பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

1 + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi