Sunday, October 6, 2024
Home » தேசிய நெடுஞ்சாலை இரூர் உயர்மட்ட மேம்பால பணி குகைப்பாதை விவகாரத்தில் சுமூக உடன்பாடு கால்நடைகளுக்கு கருவூட்டல் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பது குற்றம்

தேசிய நெடுஞ்சாலை இரூர் உயர்மட்ட மேம்பால பணி குகைப்பாதை விவகாரத்தில் சுமூக உடன்பாடு கால்நடைகளுக்கு கருவூட்டல் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பது குற்றம்

by MuthuKumar

பெரம்பலூர், டிச.1: செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது சட்டப்படி குற்றமாகும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் திருப்பதாவது: கால்நடைகளுக்கு \”கால் நடை மருத்துவ பேரவை” எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவுபெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. மீறி போலி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதும், அவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும், தவறான செயல். போலி நபர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும்

குறைபாடு, இழப்பீடுகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது. பெரம்பலூர் மாவட்டத்தில், சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் போலியாக, தாங்கள் கால் நடை மருத்துவர் எனக்கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இது முற்றிலும் தவறு.

செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினைஊசி போடுவதற்கு மட்டும் 3 மாதம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது. அவர்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதியுள்ளவர்கள். எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சைபெற அங்கீகரிக்கப்பட்ட (பதிவுபெற்ற) மருத்துவர்களை மட்டுமே மக்கள் அணுக வேண்டும்.

இதுபோன்ற கால்நடைகளுக்கான போலி மருத்துவர்கள் குறித்த தகவலை அருகேயுள்ள கால்நடை மருந்தகங்கள், காவல் நிலையத்திலும் எழுத்து வடிவில் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். கால்நடை மருத்துவ பேரவை பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்களால் வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு மட்டுமே மருந்தகங்களில் மருந்து விற்பனை செய்ய வேண்டும். போலி மருத்துவர்களின் மருந்து சீட்டுகளுக்கு மருந்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
போலி மருத்துவர்கள் எவரேனும் கண்டறியப்பட்டால் சட்டப்படி முதல்முறை 1,000 ரூபாய், 2-வது முறை 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத கடுங்காவல் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi