கரூர், மார்ச் 14: கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் அரசு குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் கலை நிகழ்ச்சி நாடகம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்துவதற்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பு நாடக மேடை சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது.இந்த நாடக மேடையை முறையாக பராமரிக்காத காரணத்தால் நாடக மேடை சிதலமடைந்து பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் அங்கும் இங்கும் இடிந்த நிலையில் காணப்படுகிறது.எனவே தற்போது உள்ள நிலையில் நாடக மேடையை சிறிய அளவு நிதியை கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரி செய்தால் வருங்காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்த முடியும். எனவே மாவட்ட கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டு விரைவாக நாடக மேடை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.