ஒட்டன்சத்திரம், மார்ச் 31: ஒட்டன்சத்திரத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் வட்ட வழங்கல் துறை சார்பில் தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என்ற தலைப்பில் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வியாபாரிகளுக்கும், காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களுக்கும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன.இதில் வட்ட வழங்கல் அலுவலர் பிரபுசங்கர், துணை வட்டாட்சியர் ராமசாமி, வருவாய் ஆய்வாளர் செல்வமங்கை, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், கிராம உதவியாளர்கள் விஜயபாஸ்கரன், பைசல்முகம்மது மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தேர்தல் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்
previous post