Sunday, October 6, 2024
Home » இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

by Mahaprabhu

ஈரோடு, மார்ச் 27: ஈரோடு மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள மணியக்காரன்பாளையம், கரட்டுப்பாளையம் ரோட்டைச் சேர்ந்தவர் ஜெய பிரகாஷ் (53). காசிபாளையத்தில் மருந்துக்கடை வைத்துள்ளார். இவரது மூத்த மகள் தனுஸ்ரீ (23). தந்தை ஜெயபிரகாஷ் அவருக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார். ஆனால், தான் மிகவும் மெலிந்த உடல்வாகாக இருப்பதால் தனக்கு திருமணம் வேண்டாம் என கூறி தனுஸ்ரீ மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் ஜெயபிரகாஷ் தனது மருந்துக் கடைக்கு சென்று விட்டார். அவரது மனைவி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார்.

சுமார் 8 மணியளவில் தனுஸ்ரீ இருந்த படுக்கையறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஜெயபிரகாஷின் மனைவி, உடனடியாக இது குறித்து தனது கணவருக்குத் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக வீட்டுக்கு வந்த ஜெயப்பிரகாஷ் கதவை உடைத்து பார்த்தபோது கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் தனுஸ்ரீ தொங்கியுள்ளார்.உடனடியாக அவரை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே தனுஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து, கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

three + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi