சென்னை: திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ல் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, நடிகை விஜயலட்சுமியை மார்ச் 19ம் ேததி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகை விஜயலட்சுமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, விஜயலட்சுமிக்கு மேலும் ஒரு அவகாசம் வழங்கப்படுகிறது. அவர் ஏப்ரல் 2ம் தேதி நேரில் ஆஜராக முடியாவிட்டால் காணொலி காட்சி மூலமாக ஆஜராகலாம் என்று உத்தரவிட்டார்.