Thursday, May 16, 2024
Home » ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் மலர் அலங்காரம்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் மலர் அலங்காரம்

by Neethimaan


ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர் செடிகள், மூலிகை செடிகள், பெரணி செடிகள் மற்றும் கள்ளிச் செடிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், அங்குள்ள புல் மைதானங்களில் ஓடியாடி விளையாடி மகிழ்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் பார்வைக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் முதல் மற்றும் இரண்டாவது சீசனின் போது அதிக அளவு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் காணப்படும். இவ்விரு சீசன்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் மலர்கள் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வழக்கம். இந்த நிலையில் பூங்காவிற்கு வரும் மகிழ்விக்கும் வகையில் கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான மலர்களை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும். தற்போது முதல் சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளில் இருந்து இந்த மலர் செடிகள் அகற்றப்பட்டு விதைப்பு பணிகளுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில் கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இதில் கண்ணாடி மாளிகையில் மலர் தட்டிகளை கொண்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் கோபுரம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். கண்ணாடி மாளிகையில், பால்சம், சைக்ளோபின், பேன்சி மற்றும் பெட்டோனியம் உட்பட பல்வேறு வகையான மலர் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

14 − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi