சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் வெள்ளை அறிக்கை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள், செலவு குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அதி கனமழையால் சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வடிகால் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது, எந்தெந்த நிதிகளின் கீழ் பணிகள் நடைபெற்றது, பணிகள் நிறைவடைய எவ்வளவு காலம் ஆகும், வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன உள்ளிட்ட தகவல்களுடன் விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியாகும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சமீபத்தில் சென்னையில் பெய்த பெரிதாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் மழை நீர் வடிகால் அமைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எப்படி என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது