எலான் மஸ்க்கின் டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர அரசு தீவிர முயற்சியை எடுக்கும் என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி அளித்துள்ளார். மின்சார கார் ஆலையை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த விரைவில் மஸ்க் இந்தியா வருகிறார். தமிழ்நாட்டில் மின்சார கார் தயாரிப்புக்கு இசைவான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.