உத்தமபாளையம்: மார்ச் 27: உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலகத்தை தேனி தெற்கு மாவட்ட செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அனுமந்தன் பட்டி பேரூர் கழகச் செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் வரவேற்றார். தேனி தெற்கு மாவட்ட செயலாளர், எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.
அவர் பேசுகையில், “தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தங்கதமிழ்செல்வனை வெற்றி பெற செய்திட அனைவரும் உழைத்திட வேண்டும்.
இதற்காக தினம் தோறும் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் பேரூராட்சி சேர்மன் ராஜேந்திரன், முன்னாள் கம்பம் ஒன்றிய அவை தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் நிர்வாகி நவநீதகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆரோக்கியசாமி, குமார், தமிழ் புலிகள் சார்பில் முனியாண்டி, இந்திய கம்யூஸ்ட் ஒன்றிய செயலாளர் மதனகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.