ஜம்முகாஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஓடியதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 78 கிலோ மீட்டர் தூரம் ஓட்டுநர் இல்லமால் சரக்கு ரயில் ஓடியது. பஞ்சாபின் ஹோஷியார்புரில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. ஹேண்ட் பிரேக் போடாமல் ஓட்டுநர் இன்ஜினில் இருந்து கீழே இறங்கியுள்ளார். சரிவு காரணமாக சரக்கு ரயில் நகர ஆரம்பித்து வேகம் அதிகரிகரித்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவு அளித்துள்ளது.