டெல்லி: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஐ.என்.டி.யூ.சி. பங்கேற்காது என்று ஐ.என்.டி.யூ.சி. முதன்மை பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நலன் கருதி போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் பொங்கல் முடிந்த பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கலாம் என அமைச்சர் கூறியுள்ளார் என்று ஐ.என்.டி.யூ.சி. முதன்மை பொதுச்செயலாளர் நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார்.