டெல்லி: 2023-24-ம் நிதியாண்டில் 16 மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டு சிறப்பு நிதியாக ரூ.56,415 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியது. தமிழ்நாட்டிற்கு ரூ.4,079 கோடியும் கர்நாடாகாவுக்கு ரூ.3,647 கோடியும், மேற்குவங்கத்திற்கு ரூ.7,523 கோடியும், பீகாருக்கு ரூ.9,640 கோடியும் நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.