திண்டுக்கல் மே 27: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்டோக்களில் அதிகளவில் ஆட்களை ஏற்றி செல்லுதல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மற்றும் வாகன உரிமத்தை புதுப்பிக்காமல் இயக்கப்பட்டு வருகின்றன என திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இதனடிப்படையில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் வழிகாட்டுதலின்படி மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையில் நேற்று ரெட்டியார்சத்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வாகன உரிமம் புதுப்பிக்காமல், அதிகளவு ஆட்களை ஏற்றி சென்ற 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை பறிமுதல் செய்து, ரெட்டியார்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். மேலும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று தொடர்ந்து விதிமுறைகள் மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.