Thursday, May 9, 2024
Home » மயிலாடுதுறை அருகே பாத்ரூமில் பதுக்கி வைத்திருந்த 2,350 மது பாட்டில் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே பாத்ரூமில் பதுக்கி வைத்திருந்த 2,350 மது பாட்டில் பறிமுதல்

by Lakshmipathi

*பெண் அதிரடி கைது

கொள்ளிடம் : மயிலாடுதுறை அருகே பாத்ரூமில் பதுக்கி வைத்திருந்த 2,350 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆளக்குடி நரியன் தெருவில் வசிப்பவர் அறிவழகன் மனைவி குமுதவல்லி (36). இவரது வீட்டில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மயிலாடுதுறை எஸ்பி மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்பி உத்தரவின்படி எஸ்பி தனிப்பிரிவு போலீஸ் மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று குமுதவல்லி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டின் பின்பு இருந்த பாத்ரூமில் 20 அட்டை பெட்டிகள் 10 மூட்டைகளில் 180 மில்லி அளவு கொண்ட 450 மதுபான பாட்டில்கள், 90 மில்லி அளவு கொண்ட 1900 மதுபான பாட்டில்கள் என மொத்தம் 2,350 மதுபான பட்டியல்கள், மேலும் 110 லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து போலீசார் மதுபான பாட்டில்கள், சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மது பாட்டிலை பதுக்கி வைத்திருந்த குமுதவல்லியை சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமுதவல்லியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

eight − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi