புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நிரந்தர கட்டடம் கேட்டு மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி நகர பகுதியில் பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 3 ஆண்டுகளாகவே பழுதடைந்து காணப்படுகிறது. மாணவிகளின் பாதுகாப்பு கருதி என்கேசி என்ற பள்ளிக்கு மாணவிகளை மாற்றினார்கள். அந்த பள்ளியிலும் இட பற்றாக்குறை இருப்பது காரணமாக மாணவர்கள் இரண்டு சுழற்சி முறையில் பள்ளிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. நகர பகுதியில் இருக்கும் திருவிக பள்ளிக்கு செல்ல வேண்டும் அறிவுறுத்தினார்கள். திருவிக பள்ளியில் இடநெருக்கடி இருக்கும் காரணத்தால் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்ல இடமில்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே காலை 9 மணியில் இருந்து மாணவர்கள் புதுச்சேரி அண்ணாசாலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனிடையில் பேச்சு வார்த்தைக்கு யாரும் வராத காரணத்தால் மாணவர்கள் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்க கூடிய கடலூர் சாலையில் தபோது போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடலூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. தங்களுக்கு புதிய கட்டடம் கட்டி தர கோரி மாணவிகள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.