பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக வேறுபாடுகளின்றி இருந்தாலும் அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர். கலைஞர் மீதும் தன் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். வேலாயுதம்…

Read more

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சைவ உணவின் விலை 8% வரை அதிகரிப்பு: கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை

டெல்லி: நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நம் வீடுகளில் சைவ உணவு தயாரிக்க ஆகும் செலவு சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாத ஒப்பீட்டின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,…

Read more

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து பிற்பகல் 3 மணிக்கு சத்ய பிரத சாகு ஆலோசனை..!!

சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து பிற்பகல் 3 மணிக்கு சத்ய பிரத சாகு ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் பிற்பகல் 3 மணிக்கு காணொலி மூலம் சத்ய பிரத சாகு ஆலோசனை நடத்துகிறார்.…

Read more

கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேனியில் நாளை உள்ளூர் விடுமுறை..!!

தேனி: வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேனியில் நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தேரோட்டம் நடைபெறுவதால் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

Read more

ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்துகொண்ட அரசு ஊழியர் கைது..!!

ஈரோடு: ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்துகொண்ட அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். நீலகிரி விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டியில் பெண்ணிடம் தவறாக நடந்த ஜிம்ரிஸ் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர்…

Read more

பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி..!!

கோவை: பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிகிச்சைக்காக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.…

Read more

வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும்: பிரதீப் ஜான்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 13ம் தேதி முதல் 22ம் தேதிக்குள் மேலடுக்கு சுழற்சி உருவான பிறகு தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு வாய்ப்பு. மே மாத…

Read more

அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் அட்சய திருதியை

சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி ‘அட்சய திருதியை’ என போற்றப்படுகிறது ‘அட்சயம்’ என்றால் வளர்வது, குறையாதது என்றுபொருள். அன்றைய தினத்தில் செய்கிற, ஆரம்பிக்கிற எல்லாகாரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும் என்பது வேதவாக்கு. இந்த நாளை…

Read more

சென்னையில் நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு இன்று பிளாஸ்டிக் சர்ஜரி..!!

சென்னை: சென்னையில் நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு இன்று பிளாஸ்டிக் சர்ஜரி நடைபெறுகிறது. ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. 5ம் தேதி நுங்கம்பாக்கம் பூங்காவில் வளர்ப்பு நாய்கள்…

Read more

உ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு..!!

லக்னோ: உத்தரப்பிரதேசம் சந்தோலியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். நில உரிமையாளரின் மகன், 3 தூய்மை பணியாளர்கள் உட்பட 4 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 15 ஆண்டுகள் பழமையான கழிவுநீர் தொட்டியை…

Read more