முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது: போக்குவரத்துத்துறை

சென்னை: முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மே 3, 4, 5-ல் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து மே 3-ல் 290 பேருந்துகளும், மே 4 ல் 365 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மே 3, 4-ல் 55 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

Related posts

விழுப்புரம் இணை சார்-பதிவாளர் வீட்டில் சோதனை

நாமக்கல் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ. மழை பதிவு!

இந்து மத நம்பிக்கையை மம்தா அரசு புண்படுத்துகிறது: பிரதமர் மோடி பேச்சு