திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் காவல்நிலைய தலைமை காவலர் ஜெகநாதனை எஸ்.பி. சஷாங் சாய் டிஸ்மிஸ் செய்தார். மோசடி வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட நபருக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்த புகாரில் ஜெகநாதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாரளிக்க வந்த இளம்பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.