சென்னை: 26 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையராக அருண் நியமனம், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக ஆல்பர்ட் ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐ.பி.எஸ். அதிகாரி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.