பாங்காங்: வியட்நாம் அதிபராக இருந்த வோ வான் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதன் காரணமாக அவர் பதவி விலகினார். இந்நிலையில் புதிய அதிபராக நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான டோ லாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை அந்நாட்டின் தேசிய சபை உறுதி செய்துள்ளது. வியட்நாமின் அதிபர் பதவி பெரும்பாலும் சம்பிரதாயமானது. ஆனால் இது நாட்டின் மிக முக்கியமான அரசியல் பதவியான அடுத்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக ஆவதற்கு மிகவும் வலுவானதாக இருக்கும் என்று மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.