உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் ஓய்வு

புதுடெல்லி: மைசூருவில் பிறந்த நீதிபதி ரவீந்திர பட் நேற்று ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2019 செப்டம்பர் 23ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன், அவர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். அவரது நான்கு வருட பதவிக் காலத்தில், ஒரே பாலின திருமண வழக்கு, பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான 10 % இடஒதுக்கீடு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் முக்கிய தீர்ப்புகள் வழங்கும் அமர்வில் நீதிபதிகளில் ஒருவராக இருந்தார்.

Related posts

கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

வேங்கைவயல் சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு!