திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அஸ்வின்குமார் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளனர். இளைஞர் அஸ்வின்குமார் கொலை வழக்கில் அவ்ஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். உறவுக்கார பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை மணந்ததால் இளைஞரை கொன்றதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.