ஒடிசா முழுவதும் சிவன் கோவில்களில் கஞ்சா பயன்பாட்டிற்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு..!!

ஒடிசா:  ஒடிசா முழுவதும் சிவன் கோவில்களில் கஞ்சா பயன்பாட்டிற்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக ஒடிசா மாநில, ஆரடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாபா அகண்டல்மணி சிவன் கோவிலில் கஞ்சா பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அனந்த பலியா அறக்கட்டளையின் தலைவரான பலியா பாபா, கடந்த ஏப்., 13ம் தேதி, ஒடிசா மாநில கலால் துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.அதில், ‘சிவன் கோவிலுக்கு மாநிலம் முழுவதும் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இருப்பினும், சிவபெருமானின் பெயரில் கஞ்சாவை அதிகமாகப் பயன்படுத்துவது அந்த இடத்தின் மத உணர்வை மாசுபடுத்துகிறது. சிவன் கஞ்சா பயன்படுத்துவதில்லை. காலப்போக்கில், ஹிந்து மதம் மற்றும் அதன் கடவுள்கள் பற்றிய பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன. கஞ்சாவிற்குப் பதிலாக பல நல்ல பொருட்களை இறைவனுக்குப் படைக்கலாம்’ என தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து அவரது கடிதம் ஒடிசா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு துறைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் சிவன் கோவில்களில் கஞ்சாவுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஒடிசா கலாச்சாரம் மற்றும் பண்பாடுத்துறை இயக்குனர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நடவடிக்கைக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தநிலையில், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related posts

சென்னையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது..!!

பூதாகரமாகும் ஜெயக்குமார் மரணம்!: வாயில் இரும்பு பிரஷ் எங்கிருந்து வந்தது?..கடைசி நாட்களில் கடனில் சிக்கி தவித்தாரா?..துப்புதுலக்கும் போலீஸ்..!!

மது போதையில் தகராறு வாலிபர் அடித்து கொலை-தஞ்சாவூரில் பயங்கரம்