மது போதையில் தகராறு வாலிபர் அடித்து கொலை-தஞ்சாவூரில் பயங்கரம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் சாணூரப்பட்டி பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் ஹரிஹரன் (27). இவர், தனது உறவினர் சுரேந்தருடன் (23) நேற்றுமுன்தினம் இரவு தஞ்சாவூருக்கு வந்தார். பின்னர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் அருகில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள், மது அருந்தி கொண்டிருந்த ஹரிஹரனிடம் நாங்களும் மது அருந்த வேண்டும். எங்கு சரக்கு கிடைக்கிறது என்று கேட்டு பிரச்னை செய்துள்ளனர். இதில் இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த 3 வாலிபர்களும் ஹரிஹரனை கட்டையால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த மருத்துவ கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின் னர் போலீசார் ஹரிஹரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவையாறு பகுதியை சேர்ந்த முகேஷ் (21), கீழவாசல் அன்சாரி (26), மதன் ஆகிய 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்