பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவண்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ரேவண்ணா அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனைக்கு பின் ரேவண்ணாவை நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.