5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு

சென்னை: 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவித்துள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலையுடன் இணைவுபெற்ற கல்லூரிகள், சீர்மிகு சட்ட பள்ளிகளில் 5 ஆண்டு படிப்புக்கு விண்ணப்பம் மே 10 ல் தொடங்கவுள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் www.tndalu.ac.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். மூன்றாண்டு சட்டப்படிப்பு, முதுநிலை சட்ட மேற்படிப்பு சேர்க்கை தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

நாலாம் தேதிக்கு அப்புறம் நம்ம கையில தான் கட்சி என குஜாலாக இருக்கும் சின்னமம்மியின் ஆதரவாளர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

வியட்நாம் அதிபரானார் டோ லாம்