திருவனந்தபுரம் :தேர்தல் பரப்புரையில் வேலைவாய்ப்பின்மை பற்றி பிரதமர் பேசவில்லை; உணர்ச்சிகளை தூண்டும் மதங்களை பற்றி மட்டுமே பிரதமர் மோடி பேசி வருகிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் வயநாட்டில் பேசிய அவர், அன்றாட வாழ்க்கைக்கு பொருந்தாத பிரச்சனைகளை பரப்புரையில் மோடி முன்வைக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.