பெரியகுளம் : பெரியகுளம் அருகே நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூரிய பிரகாஷ், வீரனேஷ்வரன், பிரகதீஷ், பிரபு ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பெரியகுளம் நோக்கி வந்த ஆட்டோவில் இருந்தவர்கள் வாகன தணிக்கையின்போது போலீசுடன் வாக்குவாதம் செய்தனர். ஆட்டோவை சோதனை செய்ததில் அதில் நாட்டு வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.