டெல்லி: எந்த அடையாளச் சான்றும் இல்லாமல் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அனுமதிப்பதை எதிர்த்த பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வங்கிகளின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் சதிஷ் சந்திர சர்மா. சுப்ரமணியம் பிரசாத் அமர்வு தள்ளுபடி செய்தது.