அப்போது அங்கு வந்த திருவாலங்காடு மேற்கு ஒன்றிய விசிக ஒன்றிய செயலாளர் நெடுமரம் காலனியை சேர்ந்த பன்னீர் (35) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூன்று பேர் பாபுவை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனை தொடர்ந்து, பாபு கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி உதவி காவல் ஆய்வாளர் ராக்கி குமாரி நேற்று வழக்கு பதிவு செய்து திருவாலங்காடு விசிக ஒன்றிய செயலாளர் பன்னீர், அக்கட்சி நிர்வாகிகள் ராமாபுரம் காலனி சேர்ந்த சசி(36), ஜோசப்(38) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.