விசிக பிரமுகருக்கு கொலை மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு மேற்கு ஒன்றிய விசிக பொருளாளராக சிவ்வாடா காலனியை சேர்ந்த பாபு (42) பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16ம் தேதி திருத்தணி துர்கா ரைஸ் மில் அருகில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அங்கு வந்த திருவாலங்காடு மேற்கு ஒன்றிய விசிக ஒன்றிய செயலாளர் நெடுமரம் காலனியை சேர்ந்த பன்னீர் (35) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூன்று பேர் பாபுவை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனை தொடர்ந்து, பாபு கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி உதவி காவல் ஆய்வாளர் ராக்கி குமாரி நேற்று வழக்கு பதிவு செய்து திருவாலங்காடு விசிக ஒன்றிய செயலாளர் பன்னீர், அக்கட்சி நிர்வாகிகள் ராமாபுரம் காலனி சேர்ந்த சசி(36), ஜோசப்(38) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை..!!

லட்சத்தை நோக்கிய விலை உயர்வு : சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.54,360க்கு விற்பனை!!

ஸ்லோவாக்கியா துப்பாக்கிச்சூடு: பிரதமர் கண்டனம்