தீயானது மளமள வென எரிந்துவருவதால் தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ முதல் தளத்தில் அதிகளவு எரிந்து வருவதால் அங்கிருக்கக்கூடிய சுவர் இடிந்து விழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளே சிக்கி உள்ளனரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தின் காரணமாக ஏற்பட்ட கரும்புகையால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இத்தகைய விபத்தில் கோடிக்கணக்கான மூலப்பொருட்கள் எறிந்திருக்க கூடும் என்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். தீ விபத்தானது எப்படி ஏற்பட்டது என்பதை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.