கடந்த ஒரு வருடத்துக்கு முன் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கு என்ஐஏ பிரிவினர் விசாரணை செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று டெல்லி மற்றும் மதுரையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 பேர் இணை இயக்குநர் ஹேட்டா ராம் தலைமையில் 2 குழுக்களாக பிரிந்து, சாகுல் ஹமீது மற்றும் அவரது மாமனார் முகமது அலி ஜின்னா(75) ஆகியோர் வீடுகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை சோதனை நடத்தினர். இதில் செல்போன், ஏடிஎம் கார்டு உள்பட முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் சாகுல் ஹமீதை மதுரை அமலாக்க துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்து சென்றனர். அவரது மாமனார் முகமது அலி ஜின்னாவிடம் இன்று மதுரைக்கு விசாரணைக்கு வர வேண்டும் எனக்கூறி சம்மன் வழங்கி சென்றுள்ளனர்.
* கோவையில் இருவர் வீடுகளில் ரெய்டு
கோவை கரும்புக்கடை, பாரத் நகரை சேர்ந்த ஒசாமா என்கிற சுலைமான், சபா கார்டனை சேர்ந்த அப்துல் காதர் ஆகிய 2 பேரின் வீடுகளில் நேற்று காலை சிறப்பு நுண்ணறிவு பிரிவு மற்றும் கோவை மாநகர போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஒன்றரை மணி நேரம் சோதனை நடந்தது. இதில், இருவரது செல்போன்களும், சில ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் 2 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிடுவதால் இவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.