இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் இன்று காலையும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று ஏழுமலையான் கோயிலில் 81,212 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 41,690 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். மேலும் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று கணக்கிடப்பட்டது. இதில் ₹2.88 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.