இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா கலந்து கொண்டு நிவாரண நிதி மற்றும் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த விழாவில் அவர் பேசும் போது,’ ஒடிசா ரயில் விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 103 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 86 பேரை இதுவரை அடையாளம் காண முடிந்துள்ளது. 172 பேர் பலத்த காயங்களுடனும், 635 பேருக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளது. பாலசோர் விபத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை மறைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.
இதை பேச விடாமல் தடுக்க மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 16 நகராட்சிகளில் சோதனை செய்ய சிபிஐயை அனுப்பியுள்ளது. இந்த சோதனைகள் மூலம் உண்மையை உங்களால் (பாஜ அரசு) மறைக்க முடியாது. உண்மை வெளிவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். விபத்தில் காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும் விபத்துக்கான காரணத்தை அறிய விரும்புகிறார்கள். அதன் பின்னணியில் உள்ள குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.