பாட்னா : நாட்டில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக பீகாரில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது; இது அதிகம் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கரின் அரசியல் சாசனம் இல்லாவிடில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த ஏழை பிரதமராகி இருக்கமுடியாது என்றும் மக்களின் ஆசி, சேவை, நாட்டின் அரசியல் சாசனம் எனக்கு புதிய இந்த பதவியை வழங்கியுள்ளது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.