மதுரை: போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சரியான நடவடிக்கை எடுக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூடுதல் விழிப்புடன் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் கஞ்சா புழக்கத்திற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளது.