சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்று மதியம் 1 மணியளவில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர் மாட்டியிருந்த பையை கொடுக்குமாறு கேட்டபோது அவர் தர மறுத்ததால் போலீசாருக்கும் அந்த நபருக்கும் சற்று வாக்குவாதம் மேற்பட்டது. இதையடுத்து அந்த நபர் கொண்டு வந்த பையை அங்கேயே வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
தப்பியோடிய நபர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தபோது கைப்பையை கீழே விட்டுவிட்டு தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.