போலீசிடம் மர்ம நபர்கள் செல்போன் பறிப்பா?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பணிமுடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போலீசிடம் மர்ம நபர்கள் செல்போன் பறித்துச் சென்ற சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை அடுத்த ஆண்டி சிறுவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (30). சென்னையில் டெக்னிக்கல் ஏடிஎஸ்பியிடம் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் பணிமுடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

அப்போது சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கரூர் கிராமத்தின் வழியே வந்துகொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்து சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். மேலும் அவரிடமிருந்து பைக் சாவியை பிடுங்கி தூரமாக வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், காவல் துறையை சேர்ந்த நபரிடமே கொலை மிரட்டல் விடுத்து, செல்போனை வழிப்பறிப்பு செய்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று கோலாகல தொடக்கம்

எம்பி கொலைக்கு சதி திட்டம் தீட்டிய அமெரிக்க தொழிலதிபரை கைது செய்ய நடவடிக்கை: கைதான பெண்ணிடம் விசாரணை

கர்நாடகாவில் கைதி லாக் அப் மரணம்? காவல்நிலையம் சூறை 11 போலீசார் படுகாயம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்