இந்நிலையில் வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் அளித்த பேட்டியில், “எம்பி கொலை சம்பவத்தில் அமெரிக்காவை சேர்ந்த அக்தருஸ்ஸாமான் ஷாகினை தேடி வருகிறோம். அவர் தான் முக்கிய சந்தேக நபர். அவரை விசாரணைக்கு உட்படுத்த இந்தியா, நேபாளம் மற்றும் அமெரிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களின் உதவியை கோரியுள்ளோம். ஷாகீனை திரும்ப கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக இன்டர்போல் உட்பட அனைத்து நிறுவனங்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள். அந்த பெண்ணை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. கொலைக்கான காரணம் என்ன என்பதை விரைவில் வெளிப்படுத்துவோம்” என்றார்.