புதுடெல்லி: தன்பாலின திருமணத்தை அங்கீகரிப்பது மிகவும் ஆட்சேபனைக்குரியதாகும் என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள் 120 பேர் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில், “நாட்டின் அடிப்படை பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின், குறிப்பாக மதக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் அதிர்ச்சி அடைய செய்கின்றன. தன்பாலின திருமணத்தை அங்கீகரிப்பது மிகவும் ஆட்சேபனைக்குரியதாகும்” என்று கூறப்பட்டுள்ளது.