மருத்துவ கலந்தாய்வை மாநில அரசுகளே நடத்தலாம் என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துவிட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: மருத்துவ கலந்தாய்வை மாநில அரசுகளே நடத்தலாம் என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துவிட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஓரிரு சிறு குறைகளும் சரி செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். தற்போது சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகார ரத்து சான்று திரும்பப் பெறப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது எனவும் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை

டெல்லியில் 8 பள்ளிகளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

அமலாக்கத்துறை சட்டத்துக்கு அப்பாற்பட்ட அமைப்பு அல்ல: டெல்லி சிறப்பு நீதிமன்றம் கண்டனம்